மூடு

கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் – மீனவர் நலத்துறை

விலையில்லா கறவைப்பசுக்கள் மற்றும் வௌ்ளாடுகள்/செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டம்

மாண்புமிகு தமிழக முதல்வா் அவர்களால் 15.09.2011 அன்று தொடங்கப்பட்ட விலையில்லா கறவை பசுக்கள் மற்றும் வௌ்ளாடுகள்/செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டங்களில், தமிழகத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்காக, ஒரு பயனாளிக்கு 4 வௌ்ளாடுகள்/செம்மறி ஆடுகள் வீதம், 31 மாவட்டங்களில் 7,70,539 பயனாளிகளுக்கு, 30,82,156 வௌ்ளாடுகள்/செம்மறி ஆடுகள் தமிழகத்தில் மீண்டும் ஒரு வெண்மை புரட்சியை உருவாக்கும் வகையில், 21 மாவட்டங்களில், 67,322 பயனாளிகளுக்கு 67,322 கறவை பசுக்களும் 2011 – 2012 முதல் 2017 – 2018 முடிய உள்ள ஆண்டுகளில் வழங்கப்பட்டுள்ளது.

இம்மாவட்டத்தில் மேற்படி திட்டங்கள் முழுமையாக முடிக்கப்பட்ட விபரம் கீழ் வருமாறு:

வ.எண் ஆண்டு திட்டத்தின் பெயா் குறியீடு பயனாளிகளின் எண்ணிக்கை குறியீடு வழங்கப்பட்ட கால்நடைகளின் எண்ணிக்கை சாதனை பயனாளிகளின் எண்ணிக்கை சாதனை வழங்கப்பட்ட கால்நடைகளின் எண்ணிக்கை
1 2011 – 12 விலையில்லா கறவை பசுக்கள் வழங்கும் திட்டம் 400 400 400 400
2 2012 – 13 விலையில்லா கறவை பசுக்கள் வழங்கும் திட்டம் 400 400 400 400
3 2013 – 14 விலையில்லா கறவை பசுக்கள் வழங்கும் திட்டம் 400 400 400 400
4 2014 – 15 விலையில்லா கறவை பசுக்கள் வழங்கும் திட்டம் 400 400 400 400
5 2015 – 16 விலையில்லா கறவை பசுக்கள் வழங்கும் திட்டம் 550 550 550 550
6 2016 – 17 விலையில்லா கறவை பசுக்கள் வழங்கும் திட்டம் 50 50 50 50
7 2017 – 18 விலையில்லா கறவை பசுக்கள் வழங்கும் திட்டம் 600 600 600 600
மொத்தம் 2800 2800 2800 2800

 

வ.எண் ஆண்டு திட்டத்தின் பெயா் குறியீடு பயனாளிகளின் எண்ணிக்கை குறியீடு வழங்கப்பட்ட கால்நடைகளின் எண்ணிக்கை சாதனை பயனாளிகளின் எண்ணிக்கை சாதனை வழங்கப்பட்ட கால்நடைகளின் எண்ணிக்கை
1 2011 – 12 விலையில்லா கறவை பசுக்கள் வழங்கும் திட்டம் 2447 9788 2447 9788
2 2012 – 13 விலையில்லா கறவை பசுக்கள் வழங்கும் திட்டம் 4262 17048 4262 17048
3 2013 – 14 விலையில்லா கறவை பசுக்கள் வழங்கும் திட்டம் 3929 15716 3929 15716
4 2014 – 15 விலையில்லா கறவை பசுக்கள் வழங்கும் திட்டம் 3901 15604 3901 15604
5 2015 – 16 விலையில்லா கறவை பசுக்கள் வழங்கும் திட்டம் 4105 16420 4105 16420
6 2016 – 17 விலையில்லா கறவை பசுக்கள் வழங்கும் திட்டம் 408 1632 408 1632
7 2017 – 18 விலையில்லா கறவை பசுக்கள் வழங்கும் திட்டம் 4229 16916 4229 16916
மொத்தம் 23281 93124 23281 93124

விலையில்லா கறவை பசுக்கள் மற்றும் வௌ்ளாடுகள்/செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டங்கள் மூலம் பயன்பெறும் பயனாளிகள் தங்கள் கால்நடைகளை கொள்முதல் செய்த பிறகு கால்நடைகளை சிறப்பாக பராமாித்த பயனாளிகளுக்கு மேற்படி ஆண்டுகளின் தழிழ் புத்தாண்டு தினத்தில் பாிசுகளும் வழங்கப்பட்டுள்ளன.
விலையில்லா கறவை பசுக்கள் மற்றும் வௌ்ளாடுகள்/செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டங்கள் மூலம் வழங்கப்பட்ட கறவை பசுக்களின் பால் உற்பத்தி திறனை பெருக்கவும், வௌ்ளாடுகள்/செம்மறி ஆடுகளின் எடையினை அதிகக்கவும், கறவைப்பசுக்களுக்கு இனப்பெருக்க மருத்துவ பாிசோதனையும், வௌ்ளாடுகள்/செம்மறி ஆடுகளுக்கு குடற்புழு நீக்க முகாமும் நடத்தப்பட்டு வருகிறது.

நாட்டுக்கோழி வளா்ப்புத் திட்டம்

திருவாரூா் மாவட்டத்தில் 2012 ஆண்டு முதல் நாட்டுக்கோழி வளா்ப்பு திட்டம் கால்நடை பராமாரிப்புத்துறையில் மூலம் செயல்பட்டு வருகிறது.
நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டம் ஒவ்வொரு ஆண்டும் திருவாரூா் மாவட்டத்தில் குறியீடு நிா்ணயம் செய்யப்பட்டு 250 கோழிக் குஞ்சுகள் கொண்ட பண்ணை அமைக்க திட்ட மதிப்பீடு நிா்ணயம் செய்யப்பட்டு வங்கி மூலம் கடன் பெற்று பண்ணை தொடங்குபவா்களுக்கு தமிழக அரசு மானியமும், பண்ணையை தொடா்ந்து நடத்துபவருக்கு ஊக்கத்தொகையும் வழங்கபட்டு வருகிறது.
வங்கி கடன் பெறாமல் சுயநிதியில் கட்டடம் கட்டி பண்ணை நடத்துபவா;கள் இத்திட்டத்தில் தகுதி அடிப்படையில் சோ்க்கப்பட்டால் அவா்களுக்கு மாநில அரசால் வழங்கப்படும் மானியம் வழங்கப்படும். கோழிப்பண்ணை நடத்த கொட்டகை அமைக்கும் போது கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அங்கீகரித்த வடிவமைப்பில் இருக்க வேண்டும். வங்கி கடன் பெற தங்கள் பகுதி வங்கி மேலாளரை அணுகி விண்ணப்பம் அளித்திட வேண்டும்.
கிராம ஊராட்சிப் பகுதிகளில் வசிப்பவார்கள் மட்டுமே இத்திட்டத்தில் பயனடைய முடியும். திட்டத்தில் பயனடைய விரும்புவோா்முழு விவரங்கள் தொரிந்து கொள்ள அருகிலுள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவா்களை அணுகி விண்ணப்பம் அளித்திட வேண்டும்.

மாநில தீவன அபிவிருத்தி திட்டம்

“இலாபகரமான கால்நடை வளா்ப்பிற்கு அரசு மானியத்துடன் கூடிய தீவனப்பயிா் அபிவிருத்தி திட்டம்”

கால்நடைகளின் உற்பத்தித்திறனுக்கு தீவனம் மற்றும் பசுந்தீவனம் மிகவும் இன்றியமையாத காரணிகள் ஆகும். பால் உற்பத்தியைப் பெருக்குவதற்கு, கறவை மாடுகளுக்கு தேவையான அளவு பசுந்தீவனம் வழங்குவது மிகவும் இன்றியமையாதது. கால்நடைகளுக்கான மொத்த உற்பத்தி செலவினத்தில் 65 – 70 விழுக்காடு, தீவன மற்றும் பசுந்தீவன உற்பத்திக்கு மட்டுமே செலவிடப்படுகிறது. கால்நடைகளுக்கு பசுந்தீவனத்தின் தேவைக்கும் உற்பத்திக்கும் இடையே மிகப் பொரிய இடைவெளி உள்ளது.
ஆகவே, தீவனப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையிலும்,கால்நடைவளா்ப்போர் பசுந்தீவனத்தை உற்பத்தி செய்வதை ஊக்கப்படுத்தும் வகையிலும் தமிழக அரசு கடந்த மாநில தீவன அபிவிருத்தி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. விவசாயிகளின்; வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் நோக்குடன் கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் நடப்பு நிதியாண்டில் திருவாரூர் மாவட்டத்தில் அரசு மானியத்துடன் கூடிய கீழ்கண் தீவனப்பயிர் சாகுபடி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அ). இறவையில் பல்லாண்டு தீவன சோளம்தீவனப்பயிர் 50 ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்திட தீவன விதைகள் வழங்குதல் (பயனாளி ஒருவருக்கு 0.25 ஏக்கர் வீதம்)
ஆ). மானாவாயில் 100 ஏக்கர் பரப்பில் தீவனச் சோளம் மற்றும் தீவனத் தட்டைப்பயறு சாகுபடி செய்திட தீவன விதைகள் வழங்குதல் (பயனாளி ஒருவருக்கு 0.25 வீதம்)
இ) மர வகை தீவனத்தின் முக்கியத்துவத்தை உணார்த்த வெல்வேல், பூவரகு,  வாகை, கல்யாண முருங்கை, வேம்பு, கொடுக்காபுலி போன்ற மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்குதல். மரவகை தீவனப்பயிர் உற்பத்தியை பெருக்குதல் மூலம் கோடை மற்றும் தீவன பற்றாக்குறை காலங்களில் தீவனம் கிடைக்க செய்தல்.
ஈ). அசோலா திடல் அமைக்க ஒரு பயனாளிக்கு ரூ.2550 மானியம் வழங்குதல் (100 சதம் மானியம்) (இம்மாவட்த்திற்கு ஒதுக்கப்பட்ட அலகுகள் 200)
உ). தீவனப்பயிர் அதிக அளவில் கிடைக்கும் காலங்களில் அவற்றை சேகரித்து பதப்படுத்தி ஊறுகாய் புல்  ஆக கால்நடைகளுக்கு தீவனப்பற்றாக்குறை காலங்களில் வழங்குவதற்கு 250 கிலோ கொள்ளளவு உடைய 4 சைலேஜ் பைகள் ஒரு விவசாயிக்கு ஊறுகாய் புல் தயாhpத்திட இலவசமாக வழங்கப்படும்.
மேற்காணும் திட்டங்களின் மூலம் பயன்பெற விருப்பமுள்ள கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள கால்நடை நிலையங்களை நேரில் தொடார்பு கொண்டு பயன்பெறலாம்.

கால்நடை பாதுகாப்புத் திட்டம்

திருவாரூர் மாவட்டத்தில் ஒவ்வொரு வருடமும் திருவாரூர்  கோட்டத்தில் – 70 முகாம்களும், மன்னார்குடி  கோட்டத்தில் – 70 முகாம்களும் மொத்தம் 140 முகாம்கள் மாவட்ட குறியீடாக நிர்ணயம் செய்யப்பட்டு கால்நடை பாதுகாப்புத் திட்ட முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
கால்நடை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நடைபெறும் முகாம்களில் கால்நடைகளுக்கு தேவையான சிகிச்சைகள், குடற்புழு நீக்கம், ஆண்மை நீக்க்ம், செயற்கை முறை கருவுட்டல் ஆகியவை அளிக்கப்படுகின்றன. மேலும் கன்றுகள் பேரணி நடத்தப்பட்டு சிறந்த கன்றுகளுக்கு பசுகள் வழங்கப்படுகிறன்றன. ஒவ்வொரு முகாமிற்கும் ரூ.1200- வீதம் (செயற்கை முறை கருவுட்டல் – ரூ.300- விளம்பரம் மற்றும் பிரச்சாரம் – ரூ.500- பசு வழங்குதல் – ரூ.400-) செலவினம் மேற்கொள்ளப்படுகிறது. இச்செலவினத்திற்கு நிதி ஒதுக்கீடு சென்னை, கால்நடை பராமரிப்பு  மற்றும் மருத்துவப்பணிகள், இயக்குனர் அவர்களால் வழங்கப்படுகிறது.

கால்நடை பராமரிப்புத்துறை

14வது சுற்று கோமா நோய் தடுப்புசிப் பணி 2018

திருவாரூர் மாவட்டத்தில் கால்நடைகள் வளர்த்து வரும் விவசாய பெருங்குடி மக்கள் நல்ல முறையில் வளர்த்து வரும் கால்நடைகளை தாக்கும் முக்கிய நோய்களில் ஒன்று கால் மற்றும் வாய் நோய் என்கிற கோமா நோய். இந்நோய் வைரஸ் கிருமிகளால் பரவுகிறது. மழைக்காலத்திலும், பனிக்காலத்திலும் இக்கிருமியானது தண்ணீர் மூலமாகவும், காற்றின் மூலமாகவும் மிக விரைவில் பரவக்கூடியது.

கால்நடைகளில் (பசுவினம் மற்றும் எருமையினம்) ஏற்படும் கால் மற்றும் வாய் நோயைக் கட்டுப்படுத்த, ஒவ்வொரு வருடமும் கால்நடைகளுக்குhpய தடுப்புசி மருந்தினை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. கோமா நோய் தடுப்பூசிப் பணிகள் ஒவ்வொரு வருடமும் மார்ச் 1ம் தேதி முதல் 21ம் தேதி முடிய மற்றும் செப்டம்பர் 1 முதல் 21 முடிய கிராம வாயிலாக தடுப்பூசிப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

கால்நடை மருத்துவக் குழுவினர் கால்நடைகளுக்கு அந்தந்த கிராமங்களில் காலை 6.00 மணி முதல் 9.00 மணி வரையிலும், மாலை 3.00 மணி முதல் 5.00 மணி வரையிலும் தடுப்பூசிப் பணி மேற்கொள்வார்கள்.

கால்நடை வளர்ப்போர் , தங்கள் கிராமத்திற்கு தடுப்பூசி குழுவினர் வரும்பொழுது தங்களிடமுள்ள 3 மாதத்திற்கு மேல் வயதுள்ள கன்றுகளுக்கும், சினைப்பசுக்கள், கறவைப்பசுக்கள், எருமைகள் மற்றும் எருதுகளுக்கும் தவறாமல் தடுப்புசியினை போட்டுக் கொண்டு பயன்பெற்று வருகின்றார்கள்.

 

மீன்வளத்துறை

முன்னுரை

திருவாரூர் மாவட்ட மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகமானது அரசாணை எண். 58, கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை நாள்: 27.04.2000-ன் படி நிறுவப்பட்டது. இவ்வலுவலகம் வாயிலாக உள்நாட்டு, கடல் மற்றும் உவர்நீர் மீன்வளத்திட்டங்கள் திருவாரூர் மாவட்டம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

திருவாரூர் மாவட்டமானது மீன்வளர்ப்பிற்கு உகந்த மற்றும் வளமான மாவட்டமாக விளங்கி வருகிறது. இம்மாவட்டத்தில், மீன்வளமானது பதினைந்தாயிரத்துக்கும் அதிகமான உள்நாட்டு, கடல் மற்றும் உவர்நீர் மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக இருக்கிறது. மேலும் அரசானது மீனவர்களின் நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்தும் அளித்து வருகிறது. மீன் உற்பத்தியை வளங்குன்றா வகையில் பெருக்குவதும் மற்றும் மதிப்பூட்டிய மீன் உணவு மூலம் மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதே இத்துறையின் நோக்கமாகும்.

கடல் மீன்வளம்

திருவாரூர் மாவட்டமானது 47.2 கி.மீ கடற்கரை நீளம் கொண்டு பாக்-ஜலசந்தியை உள்ளடக்கிய கடலோர மாவட்டமாகும். இம்மாவட்டத்தில் 13 மீனவ கிராமங்களில் 2911 மீனவக் குடும்பங்கள் மீன்பிடித்தொழில் செய்து வருகின்றனர். மொத்த மீனவ மக்கள் தொகை 11439 ஆகும். இவற்றில் 5955 மீனவர்களும் மற்றும் 5484 மீனவ மகளிரும் உள்ளனர். இம்மாவட்டத்தில் 175 இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப்படகுகளை பயன்படுத்தி மீனவர்கள் மீன்பிடித்தொழில் செய்து வருகின்றனர்.

கடலோர கிராமங்கள்

கரையங்காடு,  கற்பகநாதர்குளம், கீழவாடியக்காடு, முனங்காடு, தொண்டியக்காடு, செங்காங்காடு,  ஜாம்புவானோடை, வீரன்வயல்,  உப்பூர்,  காரைத்திடல்,
ஆலங்காடு,  துறைக்காடு, பேட்டை

கடல் மீனவர்களுக்கு வழங்கப்படும் நல்வாழ்வு மற்றும் நிவாரணத்திட்டங்கள் அனைத்தும் மீனவ கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது. இம்மாவட்டத்தில் 4300 மீனவர்களை உறுப்பினராகக் கொண்டு 9 கடல் மீனவ கூட்டுறவு சங்கங்களும் மற்றும் 1700 கடல் மீனவ மகளிர் உறுப்பினர்களைக் கொண்டு 5 கடல் மீனவ மகளிர் கூட்டுறவு சங்கங்களும் செயல்பட்டு வருகிறது.

கடல்மீனவர் கூட்டுறவு சங்கங்கள்

ஆலங்காடு,  துறைக்காடு,  ஜாம்புவானோடை,கற்பகநாதர்குளம், கீழவாடியக்காடு,  முனங்காடு,
செங்காங்காடு, தொண்டியக்காடு,  வடக்கு வெள்ளாத்திக்காடு.

கடல்மீனவ மகளிர் கூட்டுறவு சங்கங்கள்

ஆலங்காடு,  சின்னாங்கொல்லை, முத்துப்பேட்டை,செங்காங்காடு,  வடக்கு வெள்ளாத்திக்காடு.

கீழ்க்கண்ட திட்டங்கள் கடல் மீனவர்களுக்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது

  • மீன்பிடி தடைக்கால நிவாரணத்திட்டம் (ரூ. 5,000/-
  • மீன்பிடி குறைந்த கால நிவாரணத்திட்டம் (ரூ, 5,000/-)
  • தேசிய கடல் மீனவர் சேமிப்பு மற்றும் நிவாரணத்திட்டம் (ரூ. 4,500/-)
  • தமிழ்நாடு மீனவ மகளிர் சேமிப்பு மற்றும் நிவாரணத்திட்டம் (ரூ. 4,500/-)
  • மீனவர் குழு விபத்து காப்புறுதி திட்டம் (ரூ. 2,00,000/-)
  • மீனவர்/ மீனவ மகளிருக்கு உயிர் வழி அடையாள அட்டை (Bio-Metric ID) வழங்குதல்

உள்நாட்டு மீன்வளம்

பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப சத்தான உணவினை வழங்குவதில் நீர்வாழ் உயிரின வளர்ப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. கிராமப்புற மக்களுக்கு புரதச்சத்து நிறைந்த உணவு மற்றும் வேலைவாய்ப்பினை உருவாக்கித் தருவதில் உள்நாட்டு மீன்வளர்ப்பு முக்கிய பங்காற்றுகிறது. தமிழகத்தில், திருவாரூர் மாவட்டமானது அதிக வளம் கொண்ட மாவட்டமாக விளங்குகிறது. காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகள் ஆற்று மீன்வளத்திற்கு முக்கிய வளமாக உள்ளது. இம்மாவட்டத்தில் இந்திய பெருங்கெண்டை மீனினங்கள் மற்றும் சீன மீனினங்கள் மீன்வளர்ப்பு விவசாயிகளால் வளர்க்கப்பட்டு வருகிறது.

திருவாரூர் மாவட்டத்தில் 4 மீன்குஞ்சு உற்பத்தி மையங்கள், 30 மீன்குஞ்சு வளர்த்தெடுக்கும் மையங்கள் மற்றும் 950 ஹெக்டேர் பரப்பளவில் 650 மீன் வளர்ப்பு பண்ணைகள் மீன் உற்பத்திக்கு உதவுகிறது. இவ்வலுவலக கட்டுப்பாட்டில் மன்னார்குடி வட்டம், நல்லிக்கோட்டை கிராமத்தில் அரசு மீன்குஞ்சு உற்பத்தி நிலையம் மற்றும் வளர்த்தெடுக்கும் மையம் தொடங்கப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமை (DFFDA)

கிராமப்புறங்களில் மீன்வளர்ப்பினை ஊக்குவிக்கவும் மற்றும் வேலைவாய்ப்பினை பெருக்கவும், நன்னீர் மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமை (FFDA) மற்றும் உவர்நீர் மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமை (BFDA) இணைந்து மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமை (DFFDA) உருவாக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக தொழில்நுட்ப உதவிகள், மானிய உதவிகள் மற்றும் பயிற்சிகள் ஆகியன மீன்வளர்ப்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமை, மாவட்ட ஆட்சியரை பெருந்தலைவராகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. மீன்வளர்ப்பு, மீன்குஞ்சு உற்பத்தி மற்றும் இறால் வளர்ப்பு விவசாயிகள் இதில் உறுப்பினர்கள் ஆவார்கள்.

உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்கள்

உள்நாட்டில் மீன்பிடித்தல் மற்றும் அதைச் சார்ந்த தொழில்களை மேற்கொண்டு வரும் மீனவர்களை உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்களாக சேர்த்து நிவாரணத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன. அரசுடைமையாக்கப்பட்ட நீர் நிலைகளின் மீன்பாசிக் குத்தகை உரிமத்தினை உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. இம்மாவட்டத்தில் 3540 உறுப்பினர்களைக் கொண்டு 6 உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகிறது.

உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்கள்

குடவாசல், மன்னார்குடி,  நன்னிலம்,  நீடாமங்கலம், திருத்துறைப்பூண்டி, வலங்கைமான்.

உள்நாட்டு மீனவர்களுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் விபரம்:
மத்திய அரசின் நிதி உதவி திட்டத்தின் கீழ்

  • 50% மானியத்தில் புதிய மீன்பண்ணை அமைத்தல் – ரூ. 3.50 இலட்சம் / ஹெக்டேர்
  • 50% மானியத்தில் மீன்பண்ணை புனரமைத்தல் – ரூ. 1.75 இலட்சம் / ஹெக்டேர்
  • 50% மானியத்தில் உள்ளீட்டு மானியம் – ரூ. 0.75 இலட்சம் / ஹெக்டேர்

உவர்நீர் மீன்வளம்

உவர்நீர் மீன்வளர்ப்பானது பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப சத்தான உணவு, வேலைவாய்ப்பினை உருவாக்குவதிலும் மற்றும் ஏற்றுமதியிலும் முக்கிய பங்காற்றுகிறது. இம்மாவட்டமானது அதிக அளவில் உவர்நீர் வளங்களை கொண்டுள்ளது. உவர்நீர் இறால் பண்ணைகள் கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையத்தில் (Coastal Aquaculture Authority) கடலோர நீழ்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையச் சட்டம் 2005-ன் படி பதிவு செய்யப்பட்டு இறால் வளர்ப்பு நெறிமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இம்மாவட்டத்தில் 154 உவர்நீர் இறால் பண்ணைகள் கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மீனவர் நலவாரியம்

மீனவர்கள், மீன்பிடி மற்றும் மீன்பிடி சார்ந்த தொழில் மேற்கொள்பவர்களின் நல்வாழ்விற்காக தமிழ்நாடு மீனவர் நலவாரியம் தொடங்கப்பட்டு சென்னையினை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. நிவாரணத்தொகை அனைத்தும் மீனவர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் மின்னனு பரிவர்த்தனை மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

இயற்சை மரணம், விபத்து மரணம், ஈமச்சடங்கு, மீனவர்களின் வாரிசுகளுக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு மற்றும் கருச்சிதைவு ஆகியவற்றிற்கு நிதிப்பயன் வழங்கப்பட்டு வருகிறது.

மீன்துறை உதவி இயக்குநர்

மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலம்,

அறை எண். 210-213, இரண்டாம் தளம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிடம்,
திருவாரூர் – 610 004.
தொலைபேசி எண்:04366 – 224140