சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை
மாவட்ட சமூக நல அலுவலர்
மாவட்ட சமூக நல அலுவலகம்,
அறை எண் – 5 மாவட்ட ஆட்சியரகம்,
திருவாரூர் – 04366 – 224861
மின்னஞ்சல் முகவரி dswo[dot]tntvr[at]nic[dot]in
சமூக நலத்துறை மகளிர் சமுதாயத்தில் கல்வி மற்றும் பொருளாதார ரீதியில் முன்னேற்றிட செயல்பட்டு வருகிறது. மேலும் சமுதாயத்தில் பெண்களுக்கு உரிய சமூக உரிமை பெற்றிடவும் செயல்பட்டு வருகிறது.
திருவாரூர் மாவட்ட சமூக நலத்துறையில் மகளிர் மேம்பாட்டிற்காக செயல்படுத்தப்படும் திட்டங்களில் 4 வகையான திருமண நிதி உதவி திட்டங்கள் உள்ளன. அவை ஏழை பெண்கள், விதவை மகள், ஆதரவற்ற பெண்கள், விதவை மறுமணம், கலப்பு திருமணம் போன்றவற்றிற்காக பயனாளிகளுக்கு 23.05.2016 முதல் 22 கேரட் மதிப்புள்ள 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. பயனாளிகளின் கலவித்தகுதிக்கேற்ப திருமண நிதி பட்டம் / பட்டயப்படிப்பிற்கு ரூ.50,000/- மேல்நிலைக்கல்வி ரூ.25,000/-மும் வழங்கப்படுகிறது.
பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாக்கும் சட்டம் – 2013 (POSH Act )ன் கீழ் மாவட்ட அளவிலான உள்ளூர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர் விபரம்
View (PDF 296 KB )
சமூக நலத்துறை
| திட்டங்கள் | தற்போது பரிந்துரைக்கப்படும் விதிமுறைகள் |
|---|---|
| ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு விதவை மகள் திருமண நிதியுதவித் திட்டம் |
|
| அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி உதவி திட்டம் |
|
| டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண நிதி உதவித் திட்டம் |
|
| டாக்ட்ர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண திருமண நிதி உதவித்திட்டம் |
|
அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி உதவி திட்டம்
- விண்ணபிக்க வேண்டிய கால அளவு
திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்பு விண்ணபிக்க வேண்டும், கூடுமானவரை திருமணத்திற்கு ஒரு நாள் வரை விண்ணப்பங்கள் அளிப்பதை தவிர்க்கலாம், சிறப்பு நேர்வுகளில் தக்க காரணங்கள் இருந்தால் திருமணத்திற்கு முதல்நாள் வரை மனுக்களை ஏற்றுக் கொள்ளலாம் - குறைந்தபட்ச வயது 18 நிறைவு பெற்றிருக்க வேண்டும், திட்டத்தில் பயன் பெறுவதற்கு உச்ச வயது வரம்பு ஏதுமில்லை
- சான்றுகள்
ஆதரவற்றோர் சான்று எம்.எல்.ஏ. / எம்.பி-யிடம் பெற்று வழங்கலாம், அல்லது தாய், தந்தை இறப்புச்சான்று வழங்க வேண்டும் - திருமண நிதியுதவி பெறுபவர்கள் மணமகளிடம் வழங்கலாம்
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதியுதவித் திட்டம்
- இத்திருமணங்களில் ஏற்படக்கூடிய சில சிறப்பு அசாத்தியமான சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு விண்ணபிக்க வேண்டிய கால அளவு – திருமணமாகி இரண்டு ஆண்டுகளுக்குள் என நிர்ணயிக்கலாம்
- வயது
திருமணத்தின் போது 18 வயது பூர்த்தி அடைந்திருத்தல் வேண்டும. திட்டத்தில் பயன் பெறுவதற்கு உச்ச வயது வரம்பு ஏதுமில்லை - சான்றுகள்
- திருமண பத்திரிக்கை அல்லது திருமண பதிவுச் சான்று
- மணமகள் மற்றும் மணமகன் சாதிச்சான்று மற்றும் வயதுச்சான்று
- திருமண நிதியுதவி பெறுபவர்கள் மணமகள் மற்றும் மணமகனிடம் வழங்கலாம்
- நிதியுதவி பரிந்துரைக்கப்படும் வழிமுறைகள்
திட்டம்-1ல் ரூ.25,000/-மும் (ரூ.15,000/- காசோலையாகவும், ரூ.10,000/- தேசிய சேமிப்பு பத்திரமாகவும்) 8 கிராம் தங்கமும்) வழங்கப்படும். திட்டம் 2ல் பட்டப் படிப்பு / பட்டயப் படிப்பு முடித்தவர்களுக்கு (ரூ.50,000/-ம் (ரூ.30,000 காசோலையாகவும் ரூ.20,000/-. தேசிய சேமிப்பு பத்திரமாகவும்) மற்றும் 8 கிராம் தங்கமும் வழங்கப்படும் - டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண திருமண நிதி உதவித்திட்டம்
- விண்ணபிக்க வேண்டிய கால அளவு திருமணமாகி ஆறு மாதத்திற்குள் இருத்தல் வேண்டும்
- வயது வரம்பு
திருமணத்தின் போது குறைந்தபட்ச வயது 20 ஆக இருக்க வேண்டும். மணமகனின் வயது 40க்குள் இருத்தல் வேண்டும் - சான்று
- விதவைச் சான்று
- மறுமண பத்திரிக்கை
- திருமண நிதியுதவி பெறுவபவர்கள் மறுமணம் செய்யும் மணமகள்
- நிதியுதவி பரிந்துரைக்கப்படும் வழிமுறைகள்
திட்டம் 1ல் ரூ.25,000 –மும் (ரூ.15,000/- காசோலையாகவும், ரூ.10,000/- தேசிய சேமிப்பு பத்திரமாகவும்) மற்றும் 8 கிராம் தங்கமும் வழங்கப்படும்,
திட்டம் 2ல் பட்டப் படிப்பு / பட்டயப் படிப்பு முடித்தவர்களுக்கு ரூ.50,000 –மும் (ரூ.30,000/- காசோலையாகவும், ரூ.20,000/- தேசிய சேமிப்பு பத்திரமாகவும்) மற்றும் 8 கிராம் தங்கமும் வழங்கப்படும்
முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்
திட்டம் – 1
- ஒரு பெண் குழந்தையுடன் குடும்ப நல அறுவைசிகிச்சை மேற்கொண்டால் அப்பெண் குழந்தைக்கு ரூ.50,000/- தமிழ்நாடு மின்விசை கட்டுமானக் கழகத்தின் மூலம் வைப்புத்தொகை பத்திரம் பெற்றுத் தரப்படும்.
திட்டம் – 2 - இரண்டு பெண் குழந்தைகளுடன் குடும்ப நல அறுவைசிகிச்சை மேற்கொண்டால் தலா ரூ.25,000/- வீதம் இரண்டு குழந்தைகளுக்கும் தமிழ்நாடு மின்விசை கட்டுமானக் கழகத்தின் மூலம் வைப்புத்தொகை பத்திரம் பெற்றுத் தரப்படும்.
திட்டம் – 3 - முதல் குழந்தை பேற்றின் போது ஒரு பெண் குழந்தையும், இரண்டாவது குழந்தைப் பேற்றின் போது, இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்தால் சிறப்பினமாக கருதி, மூன்று பெண் குழந்தைகளுக்கும் தலா ரூ.25,000/- வீதம் தமிழ்நாடு மின்விசை கட்டுமானக் கழகத்தின் மூலம் வைப்புத்தொகை பத்திரம் பெற்றுத் தரப்படும்.
திட்டத்தின் நோக்கம்
பெண் குழந்தைகளுக்கு குறைந்த பட்ச கல்வித்தகுதி (10ம் வகுப்பு) அளிக்கும் நோக்கத்துடன் இத்திட்டம் அரசால் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் விண்ணப்பிக்க தேவைப்படும் சான்றுகள்
- தாய் தந்தையரின் வயதுச் சான்று (பள்ளி மாற்றுச் சான்று)
- பெண் குழந்தைகளின் பெயருடன் கூடிய பிறப்புச் சான்று
- குடும்ப நல அறுவைசிகிச்சை சான்று (தாய் அல்லது தந்தை)
- 10ஆண்டுகள் தமிழ்நாட்டில் குடியிருந்து வருவதற்கான சான்று (வட்டாட்சயர்)
- ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்று (வட்டாட்சயர்)
- குடும்ப வருமான சான்று (வட்டாட்சயர்)
- ஆண் குழந்தை தத்து எடுக்க மாட்டேன் என்பதற்கான சான்று (பெற்றோர்)
- குடும்ப புகைப்படம்
- குடும்ப அட்டை நகல்
- ஆதார் நகல்
சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச
தையல் இயந்திரம் வழங்கும் திட்டம்
- இத்திட்டத்தில் பயன்பெற தகுதிகள்
- வயது – 40க்குள் இருக்க வேண்டும்
- விதவை, கணவரால் கைவிடப்பட்டவர், ஊனமுற்றவராக இருக்க வேண்டும்.
சான்றுகள் - பள்ளி மாற்றுச் சான்று
- விதவைச் சான்று
- கணவரால் கைவிடப்பட்டவர் சான்று
- வருமானச் சான்று 72,000க்குள்
- தையற் பயிற்சி சான்று (குறைந்தது 6 மாதம்)
- ஆதார் நகல்